தேவையான பொருட்கள் :
* வெந்தயக்கீரை 2 கட்டு
* தேங்காய் துருவல் அரை கப்
* மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்
* பயத்தம் பருப்பு அரை கப்
* சின்ன வெங்காயம் 4
* உப்பு தேவைக்கேற்ப
* தக்காளி 1
* கடுகு கால் டீஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
பயத்தம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.
பிறகு கீரை வெந்ததும் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
2 நிமிடம் கழித்து நறுக்கிய தக்காளி மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து கிளறி விடவும்.
பிறகு வேக வைத்த பயத்தம் பருப்பை சேர்த்து கிளறி விட்டு கொதிக்க விடவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தாளித்தவற்றை கொதிக்கும் கூட்டில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
சுவையான வெந்தயக்கீரை கூட்டு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை