தேவையான பொருட்கள் :
* வெந்தயக்கீரை2 கட்டு
* கடலைப்பருப்பு அரை கப்
* பெரிய வெங்காயம் 1
* பூண்டு பல் 4
* மிளகாய்தூள் கால் டேபிள் ஸ்பூன்
* மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
* சீரகத்தூள் அரை டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் அரை டீஸ்பூன்
* கடுகு அரை டீஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் வேக வைக்கவும்.
கீரையை சுத்தமாக அலசிக் கொள்ளவும்.
பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பூண்டு சேர்க்கவும்.
பூண்டு வதங்கியதும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் கீரை, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பருப்பை சேர்க்கவும்.
சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கும்பொழுது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதம் மற்றும் தோசைக்கு சேர்த்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை