இந்நோயானது மைக்கோபாக்டீரியம் ட்யூபெர்குலோசிஸ் என்னும் ஒரு வகையான நுண்ணுயிர் கிருமிகள் மூலம் ஏற்படுகிறது. இக்கிருமிகள் மாடுகளை பாதிப்பதோடு மனிதர்களையும் அதிகம் பாதிக்கிறது.


               மேலும் இந்நோய் கிருமிகள் நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கி பராமரிப்பதாலும் மனிதர்களுக்கும் பரவுகின்றன. எனவே இந்நோயைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


அறிகுறிகள்

                மாடுகளில் காய்ச்சல் விட்டு விட்டு இருக்கும். மாடுகள் மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறைந்து காணப்படும். இதனால் இருமல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும்.


                நிணநீர் முடிச்சு வீங்கி விடுவதால் அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படும். குடற்பகுதி பாதிக்கப்படுவதால் வயிற்றுப் போக்கு ஏற்படும். மடி பாதிக்கப்பட்டால் மடியில் கட்டிகள் ஏற்பட்டு, மாடுகளின் பாலின் தன்மை கெட்டுப்போகும்.


               பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க் கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.


தடுப்பு முறைகள்

                இளைத்துக்கொண்டே வரும் மாடுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தி காச நோய் உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும். நோயுற்ற மாடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்த வேண்டும்.


               ஆறுமாதத்திற்கு ஒரு முறை மாடுகளை காசநோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். நோயுற்ற மாட்டின் பாலை, கொதிக்க வைத்து அருந்த வேண்டும்.


                காற்றோட்ட வசதி மற்றும் நல்ல தரமான தீவனம் இவை இரண்டும் இந்நோய்த் தடுப்பில் பெரிதும் உதவுகின்றன.


                கன்று பிறந்த 10 நாட்களுக்குள் தடுப்பூசி போடவேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க்கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.

காசநோய் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

              இந்நோயானது மைக்கோபாக்டீரியம் ட்யூபெர்குலோசிஸ் என்னும் ஒரு வகையான நுண்ணுயிர் கிருமிகள் மூலம் ஏற்படுகிறது. இக்கிருமிகள் மாடுகளை பாதிப்பதோடு மனிதர்களையும் அதிகம் பாதிக்கிறது.


               மேலும் இந்நோய் கிருமிகள் நோயுற்ற பசுவின் பாலை அருந்துவதாலும், மாட்டோடு நெருங்கி பராமரிப்பதாலும் மனிதர்களுக்கும் பரவுகின்றன. எனவே இந்நோயைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


அறிகுறிகள்

                மாடுகளில் காய்ச்சல் விட்டு விட்டு இருக்கும். மாடுகள் மெலிந்து காணப்படும். தொடர்ந்து உடல் எடை குறைந்து காணப்படும். இதனால் இருமல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும்.


                நிணநீர் முடிச்சு வீங்கி விடுவதால் அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படும். குடற்பகுதி பாதிக்கப்படுவதால் வயிற்றுப் போக்கு ஏற்படும். மடி பாதிக்கப்பட்டால் மடியில் கட்டிகள் ஏற்பட்டு, மாடுகளின் பாலின் தன்மை கெட்டுப்போகும்.


               பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க் கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.


தடுப்பு முறைகள்

                இளைத்துக்கொண்டே வரும் மாடுகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தி காச நோய் உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும். நோயுற்ற மாடுகளைப் பிரித்துத் தனிமைப்படுத்த வேண்டும்.


               ஆறுமாதத்திற்கு ஒரு முறை மாடுகளை காசநோய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். நோயுற்ற மாட்டின் பாலை, கொதிக்க வைத்து அருந்த வேண்டும்.


                காற்றோட்ட வசதி மற்றும் நல்ல தரமான தீவனம் இவை இரண்டும் இந்நோய்த் தடுப்பில் பெரிதும் உதவுகின்றன.


                கன்று பிறந்த 10 நாட்களுக்குள் தடுப்பூசி போடவேண்டும். பாதிக்கப்பட்ட மாடுகள், நோய்க்கண்ட சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை துன்பப்பட்டு இறந்து விடும்.

கருத்துகள் இல்லை