தேவையான பொருட்கள் :
* வெந்தயக்கீரை 1 கட்டு
* உருளைக்கிழங்கு கால் கிலோ (நறுக்கியது)
* வெங்காயம் 1
* தக்காளி 1
* பச்சை மிளகாய் 2 (நறுக்கியது)
* இஞ்சி 1 டீஸ்பூன் (நறுக்கியது)
* பூண்டு பல் 3
* மஞ்சள்பொடி அரை டீஸ்பூன்
* மிளகாய்ப்பொடி கால் டேபிள் ஸ்பூன்
* மல்லிப்பொடி முக்கால் டேபிள் ஸ்பூன்
* சீரகம் அரை டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பு+ண்டைத் தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்கவும்.
பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உருளைகிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு தட்டிய இஞ்சி, பூண்டு, மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு நன்றாக கழுவிப் பிழிந்த வெந்தையக்கீரையை சேர்த்து கிளறவும். கடைசியாக தக்காளியைப் போட்டு கிளறவும்.
பிறகு சிறிது தண்ணீர் தௌpத்து வாணலியை மூடி வைக்கவும்.
தண்ணீர் வற்றி உருளைக்கிழங்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை