பேன், தெள்ளுப்பூச்சி, சொறிப்பூச்சி, ஈக்கள், கொசு மற்றும் உண்ணி ஆகியவற்றால் மாடுகள் பெரிதும் தொல்லைக்கு உட்படுவதோடு, இரத்த இழப்பால் நலிவடைந்து காணப்படும். அதுமட்டுமல்லாமல் பால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய உண்ணிகள் சில வகை நோய்களை பரப்புகின்றன. அதை பற்றி காண்போம்.


சிறு ஈக்கள்

               இந்த ஈக்கள் வீட்டு ஈயைவிட மிகச்சிறியதாக காணப்படும். இந்த ஈ சாம்பல் நிறத்தில் இருக்கும். இவ்வகை ஈக்கள் மாடுகளின் தோள் மற்றும் பின் பகுதியில் ஒட்டிக் கொண்டு நாள் முழுவதும் இரத்தத்தை உறிஞ்சும்.


               ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் மாட்டை விட்டு சிறிது தூரம் பறந்து, பின் மீண்டும் மாட்டின் மீது வந்து ஒட்டிக்கொள்ளும். இவை முட்டையிடுவதற்கு மட்டுமே ஈரமான சாணங்ளை தேடிச் செல்லும்.


               மேலும் மற்ற நேரங்களில் மாட்டின் மேல் அமர்ந்து அதன் நுண்ணிய நீண்ட வாய்ப்பகுதியில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதால் விலங்குகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டிருப்பதோடு மிகுந்த இரத்த இழப்பும் ஏற்படும்.


முக ஈக்கள்

               இந்த ஈக்களை பார்ப்பதற்கு வீட்டில் இருக்கும் ஈக்களை போல் காணப்படும். இந்த ஈக்கள் கூட்டமாக மாட்டின் முகத்தின் மேல் அமர்ந்து கொண்டு கண், வாய் மற்றும் உதடுகளில் சுரக்கும் திரவங்களை உறிஞ்சிக் கொண்டிருக்கும்.


               இந்த ஈக்கள் இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. மேலும் வெளிர் சிவப்புக் கண் நோயை ஏற்பட்டுத்தும் பாக்டீரியாவை பரப்புகிறது. இந்த ஈக்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும்.


மாட்டு ஈக்கள்

               இவை அளவில் வீட்டு ஈக்களை விட மிக பெரியதாக இருக்கும். மேலும் கடிக்கும் வீட்டு ஈக்கள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இந்த ஈக்கள் அதிகமாக கால் மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் காணப்படுகிறது.


               மேலும் கூர்மையான வாய்ப்பகுதி கொண்டு இரத்தத்தை வயிற்றில் நிரப்பிக் கொண்டு, நிழலான இடங்களுக்கு சென்று இரத்தத்தை செரிக்கச் செய்யும். இதில் இரத்தக் குழம்பு அதிகமாக காணப்படும்.


உண்ணிகள்

               இவை இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சும். இதனால் மாடுகள் ஓய்வின்றி காணப்படும். இந்த உண்ணிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும்.


                இந்த உண்ணிகள் மேய்ச்சல் பகுதிகளில் அதிகமாக காணப்படும். மாட்டின் மேல் மற்றும் தொழுவத்தில் உள்ள உண்ணிகளை மருத்துகள் தெளித்து கட்டுப்படுத்தலாம்.


பேன்கள்

               இவை தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும். மேலும் காதுகளைச் சுற்றி அதிகமாகக் காணப்படும். இதனால் மாடுகள் பசியின்றி எடைக் குறைந்து வளர்ச்சியற்று இருக்கும்.


                இந்த பேன்கள் குளிர் காலங்களை அதிகமாக பெருகும். எனவே குளிர் காலம் தொடங்கும் முன் பேன் பரவுவதை தடுக்க மருந்து நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். 3 வாரங்கள் தொடர்ந்து மருந்து அளிக்கப்படவில்லை என்றால் சில முட்டைகள் சாகாது. மேலும் தெளிப்பு முறை அல்லது விலங்குகளின் முதுகில் ஊற்றுவதன் மூலம் மருந்து கொடுக்கலாம்.


தெள்ளுப்பூச்சி

                 இந்த பூச்சியானது தோல் நோயை ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சி தோல் முழுவதும் பரவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தோல் கடினமாகி முடி உதிர்ந்து விடும். இப்பூச்சி அதிக அளவு பெருகினால் கால்நடை நலிவடைந்து விடும்.


                 மேலும் இத்தொழு நோய் சார்கோப்டிக், பூச்சிகளால் ஏற்படுகிறது. கோரியோப்டஸ், டெமோடெக்ஸ் மற்றும் சாரா கேட்ஸப் பூச்சிகள் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன.


                இவை குழியில் மறைந்து கொள்ளுவதால், கட்டுப்படுத்துவது கடினம். எனவே ஊசி மூலம் உட்செலுத்தும் மருந்துகளை உபயோகித்து நீக்கலாம். பேன் கட்டுப்பாட்டு முறை போல இதிலும் 2 அல்லது 3 முறை பயன்படுத்தவேண்டும்.

வெளிப்புற ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்கள்

                பேன், தெள்ளுப்பூச்சி, சொறிப்பூச்சி, ஈக்கள், கொசு மற்றும் உண்ணி ஆகியவற்றால் மாடுகள் பெரிதும் தொல்லைக்கு உட்படுவதோடு, இரத்த இழப்பால் நலிவடைந்து காணப்படும். அதுமட்டுமல்லாமல் பால் உற்பத்தி மிகவும் பாதிக்கப்படுகிறது. இத்தகைய உண்ணிகள் சில வகை நோய்களை பரப்புகின்றன. அதை பற்றி காண்போம்.


சிறு ஈக்கள்

               இந்த ஈக்கள் வீட்டு ஈயைவிட மிகச்சிறியதாக காணப்படும். இந்த ஈ சாம்பல் நிறத்தில் இருக்கும். இவ்வகை ஈக்கள் மாடுகளின் தோள் மற்றும் பின் பகுதியில் ஒட்டிக் கொண்டு நாள் முழுவதும் இரத்தத்தை உறிஞ்சும்.


               ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் மாட்டை விட்டு சிறிது தூரம் பறந்து, பின் மீண்டும் மாட்டின் மீது வந்து ஒட்டிக்கொள்ளும். இவை முட்டையிடுவதற்கு மட்டுமே ஈரமான சாணங்ளை தேடிச் செல்லும்.


               மேலும் மற்ற நேரங்களில் மாட்டின் மேல் அமர்ந்து அதன் நுண்ணிய நீண்ட வாய்ப்பகுதியில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதால் விலங்குகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டிருப்பதோடு மிகுந்த இரத்த இழப்பும் ஏற்படும்.


முக ஈக்கள்

               இந்த ஈக்களை பார்ப்பதற்கு வீட்டில் இருக்கும் ஈக்களை போல் காணப்படும். இந்த ஈக்கள் கூட்டமாக மாட்டின் முகத்தின் மேல் அமர்ந்து கொண்டு கண், வாய் மற்றும் உதடுகளில் சுரக்கும் திரவங்களை உறிஞ்சிக் கொண்டிருக்கும்.


               இந்த ஈக்கள் இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. மேலும் வெளிர் சிவப்புக் கண் நோயை ஏற்பட்டுத்தும் பாக்டீரியாவை பரப்புகிறது. இந்த ஈக்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும்.


மாட்டு ஈக்கள்

               இவை அளவில் வீட்டு ஈக்களை விட மிக பெரியதாக இருக்கும். மேலும் கடிக்கும் வீட்டு ஈக்கள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. இந்த ஈக்கள் அதிகமாக கால் மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் காணப்படுகிறது.


               மேலும் கூர்மையான வாய்ப்பகுதி கொண்டு இரத்தத்தை வயிற்றில் நிரப்பிக் கொண்டு, நிழலான இடங்களுக்கு சென்று இரத்தத்தை செரிக்கச் செய்யும். இதில் இரத்தக் குழம்பு அதிகமாக காணப்படும்.


உண்ணிகள்

               இவை இரத்தத்தை அதிக அளவு உறிஞ்சும். இதனால் மாடுகள் ஓய்வின்றி காணப்படும். இந்த உண்ணிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும்.


                இந்த உண்ணிகள் மேய்ச்சல் பகுதிகளில் அதிகமாக காணப்படும். மாட்டின் மேல் மற்றும் தொழுவத்தில் உள்ள உண்ணிகளை மருத்துகள் தெளித்து கட்டுப்படுத்தலாம்.


பேன்கள்

               இவை தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். தோலைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும். மேலும் காதுகளைச் சுற்றி அதிகமாகக் காணப்படும். இதனால் மாடுகள் பசியின்றி எடைக் குறைந்து வளர்ச்சியற்று இருக்கும்.


                இந்த பேன்கள் குளிர் காலங்களை அதிகமாக பெருகும். எனவே குளிர் காலம் தொடங்கும் முன் பேன் பரவுவதை தடுக்க மருந்து நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். 3 வாரங்கள் தொடர்ந்து மருந்து அளிக்கப்படவில்லை என்றால் சில முட்டைகள் சாகாது. மேலும் தெளிப்பு முறை அல்லது விலங்குகளின் முதுகில் ஊற்றுவதன் மூலம் மருந்து கொடுக்கலாம்.


தெள்ளுப்பூச்சி

                 இந்த பூச்சியானது தோல் நோயை ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சி தோல் முழுவதும் பரவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தோல் கடினமாகி முடி உதிர்ந்து விடும். இப்பூச்சி அதிக அளவு பெருகினால் கால்நடை நலிவடைந்து விடும்.


                 மேலும் இத்தொழு நோய் சார்கோப்டிக், பூச்சிகளால் ஏற்படுகிறது. கோரியோப்டஸ், டெமோடெக்ஸ் மற்றும் சாரா கேட்ஸப் பூச்சிகள் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன.


                இவை குழியில் மறைந்து கொள்ளுவதால், கட்டுப்படுத்துவது கடினம். எனவே ஊசி மூலம் உட்செலுத்தும் மருந்துகளை உபயோகித்து நீக்கலாம். பேன் கட்டுப்பாட்டு முறை போல இதிலும் 2 அல்லது 3 முறை பயன்படுத்தவேண்டும்.

கருத்துகள் இல்லை