தேவையான பொருட்கள் :
* வெந்தயக்கீரை 1 கட்டு
* சின்ன வெங்காயம் 1 கப்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* தக்காளி 1
* சீரகம் 1 டீஸ்பூன்
* பூண்டு பல் 6
* தேங்காய் துருவல் அரை கப்
* கரம் மசாலா தூள்1 டேபிள் ஸ்பூன்
* புளி எலுமிச்சை அளவு
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் பூண்டு போட்டுத் தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கியதையும் போட்டு வதக்கவும்.
தேங்காய் துருவல், பூண்டு, கரம் மசாலா தூள் முதலியவற்றை அரைத்து புளிக் கரைசலுடன் சேர்த்து வெந்தயக்கீரையுடன் சேர்க்கவும்.
உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி விடவும். அடுப்பை மிதமாக வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
குறிப்பு : இதே போல் கறிவேப்பிலையை நன்றாக வறுத்து அரைத்து, முன்பே அரைத்து வைத்திருந்த மசாலாவில் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
கருத்துகள் இல்லை