தேவையான பொருட்கள் :

                 * தொய்யக்கீரை 1 கட்டு

                 * துவரம் பருப்பு அரை கப்

                 * வெங்காயம் 6

                 * தக்காளி 1

                 * பச்சை மிளகாய் 3

                 * பூண்டு பல் 5

                 * புளி எலுமிச்சை அளவு

                 * பெருங்காயம் அரை சிட்டிகை

                 * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

                 * சீரகம் அரை டீஸ்பூன்

                 * எண்ணெய் தேவைக்கேற்ப

                 * கடுகுஅரை டீஸ்பூன்

                 * உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்

                 * காய்ந்த மிளகாய் 1

                 * கறிவேப்பிலை ஒரு கொத்து


செய்முறை :

                 துவரம் பருப்பைக் கழுவி அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.


                 கீரையை தண்ணீரில் நன்றாக அலசி சுத்தமாக எடுத்து வைக்கவும்.


                 புளியை தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.


                 ஒரு பாத்திரத்தில் ஊறிய பருப்பைப் போட்டு அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், சீரகம் மற்றும் பெருங்காயம் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.


                 பருப்பு நன்கு வெந்தவுடன் சுத்தம் செய்த கீரையைக் கொட்டி, நன்கு கிளறிவிட்டு வேகவிடவும்.


                  கீரை நன்கு வெந்தவுடன் உப்பு சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.


                  பிறகு புளிக் கரைசல் சேர்த்து நன்கு கலக்கி, ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்.


                  வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு தாளித்து குழம்பில் கொட்டவும். சுவையான கீரைக் குழம்பு தயார்.


                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த கீரைக் குழம்பை சாதம், பொரித்த கருவாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தொய்யக்கீரை குழம்பு செய்முறை

தேவையான பொருட்கள் :

                 * தொய்யக்கீரை 1 கட்டு

                 * துவரம் பருப்பு அரை கப்

                 * வெங்காயம் 6

                 * தக்காளி 1

                 * பச்சை மிளகாய் 3

                 * பூண்டு பல் 5

                 * புளி எலுமிச்சை அளவு

                 * பெருங்காயம் அரை சிட்டிகை

                 * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

                 * உப்பு தேவைக்கேற்ப

                 * சீரகம் அரை டீஸ்பூன்

                 * எண்ணெய் தேவைக்கேற்ப

                 * கடுகுஅரை டீஸ்பூன்

                 * உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்

                 * காய்ந்த மிளகாய் 1

                 * கறிவேப்பிலை ஒரு கொத்து


செய்முறை :

                 துவரம் பருப்பைக் கழுவி அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.


                 கீரையை தண்ணீரில் நன்றாக அலசி சுத்தமாக எடுத்து வைக்கவும்.


                 புளியை தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.


                 ஒரு பாத்திரத்தில் ஊறிய பருப்பைப் போட்டு அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், சீரகம் மற்றும் பெருங்காயம் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.


                 பருப்பு நன்கு வெந்தவுடன் சுத்தம் செய்த கீரையைக் கொட்டி, நன்கு கிளறிவிட்டு வேகவிடவும்.


                  கீரை நன்கு வெந்தவுடன் உப்பு சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.


                  பிறகு புளிக் கரைசல் சேர்த்து நன்கு கலக்கி, ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும்.


                  வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு தாளித்து குழம்பில் கொட்டவும். சுவையான கீரைக் குழம்பு தயார்.


                  இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த கீரைக் குழம்பை சாதம், பொரித்த கருவாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை