தேவையான பொருட்கள் :
* வெந்தயக்கீரை 2 கட்டு
* வெங்காயம் 1
* தக்காளி 1
* பச்சை மிளகாய் 2
* பூண்டு பல்2
* கடுகு 1 டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
* எண்ணெய் தேவைக்கேற்ப
* பெருங்காய தூள் 2 சிட்டிகை
* தேங்காய் துருவல் கால் கப்
* கருவேப்பிலை 1 கொத்து
* கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
வெந்தயக்கீரை வோpனை எடுத்துவிட்டு மிக சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மல்லி இலை இவைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் கடுகு உளுத்தம்பருப்பு போடவும்.
உடனே பெருங்கயப்பொடியை போடவும் பிறகு கருவேப்பிலையை போட்டு உடன் நறுக்கி வைத்துள்ள பூண்டு துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இவைகளை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு வெந்தயக்கீரையை போட்டு நன்றாக கிளறவும்.
பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு நன்றாக கிளறவும். நன்றாக வேக வைத்து தண்ணீர் சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
பிறகு தேங்காய் துருவலை போட்டு நன்றாக கிளறி விட்டு நறுக்கி வைத்துள்ள மல்லி இலையை போட்டு இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை