* பொதுவான பரிசோதனையில் இரத்தத்தின் மொத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு வெள்ளையணுவின் தனிப்பட்ட எண்ணிக்கை, இரத்த ஹீமோகுளோபின் போன்றவைகள் செய்யப்படும். இந்த நோயாளிகளுக்குப் பொதுவாக, இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். குறிப்பாக, 'லிம்போசைட்" வெள்ளையணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கும். இத்துடன், 'ஹீமோகுளோபினின்" அளவும் குறைந்தே காணப்படும்.

'எலிசா" பரிசோதனை :

* 'எலிசா" பரிசோதனையின் மூலம் நோயாளியின் உடலில் ஹெச்.ஐ.வி. வைரஸ் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இது ஒரு எளிய பரிசோதனையாகும். இன்று தமிழகத்திலுள்ள பல்வேறு அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இப்பரிசோதனை செய்யப்படுகிறது.

'வெஸ்ட்டன் பிளாட்" பரிசோதனை :

                  * எய்ட்ஸ் கிருமியின் பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய 'வெஸ்ட்டன் பிளாட்" என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. இது, இந்த வைரஸிற்கு எதிராக உண்டான எதிர்ப்பாற்றல் புரதங்களைக் கண்டறியும் பரிசோதனையாகும். இதன் மூலம், ஒருவருக்கு 'எய்ட்ஸ்" ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடியும்.

பி.ஸி.ஆர். பரிசோதனை :

                 * 'எய்ட்ஸ்" வைரஸின் பாதிப்பை அறிந்து கொள்ள மிகவும் நுட்பமான பரிசோதனையாகும் இது. இந்த 'பி.ஸி.ஆர்." பரிசோதனையை, 'பாலி மரேஸ் செயின்ரியாஷன்" என்று கூறுவார்கள். இப்பரிசோதனை மூலம், 'எய்ட்ஸ்" கிருமி உடலில் இருப்பதை உறுதி செய்வதுடன், எந்த அளவிற்கு இந்த வைரஸ் இரத்தத்தில் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியும். மேலும், இந்த வைரஸ் உடலில் உட்புகுந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே இப்பரிசோதனையின் மூலமாக இதைக் கண்டுபிடிக்க முடியும்.

                * இரத்தத்தில் 'லிம்போசைட்ஸ்" எனப்படும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை, குறிப்பாக சிடி4 என்ற வெள்ளையணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும். உடலின் எதிர்ப்புத்திறன் குறைந்து விடும். இதன் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் உண்டாகும். சிடி4 செல்களின் எண்ணிக்கையைக் கொண்டு எய்ட்ஸ் நோயின் தன்மையையும் அறியலாம்.

24 ஆன்டிஜின் பரிசோதனை :

                      * எய்ட்ஸ் நோயை உறுதி செய்ய 24 என்ற ஆன்டிஜின் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த ஆன்டிஜின், எய்ட்ஸ் வைரஸின் உடலிலுள்ள முக்கிய ஆன்டிஜினாகும்.

எய்ட்ஸ் நோய் பொதுவான பரிசோதனைகள் :

                      * பொதுவான பரிசோதனையில் இரத்தத்தின் மொத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு வெள்ளையணுவின் தனிப்பட்ட எண்ணிக்கை, இரத்த ஹீமோகுளோபின் போன்றவைகள் செய்யப்படும். இந்த நோயாளிகளுக்குப் பொதுவாக, இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். குறிப்பாக, 'லிம்போசைட்" வெள்ளையணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கும். இத்துடன், 'ஹீமோகுளோபினின்" அளவும் குறைந்தே காணப்படும்.

'எலிசா" பரிசோதனை :

* 'எலிசா" பரிசோதனையின் மூலம் நோயாளியின் உடலில் ஹெச்.ஐ.வி. வைரஸ் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இது ஒரு எளிய பரிசோதனையாகும். இன்று தமிழகத்திலுள்ள பல்வேறு அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இப்பரிசோதனை செய்யப்படுகிறது.

'வெஸ்ட்டன் பிளாட்" பரிசோதனை :

                  * எய்ட்ஸ் கிருமியின் பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய 'வெஸ்ட்டன் பிளாட்" என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. இது, இந்த வைரஸிற்கு எதிராக உண்டான எதிர்ப்பாற்றல் புரதங்களைக் கண்டறியும் பரிசோதனையாகும். இதன் மூலம், ஒருவருக்கு 'எய்ட்ஸ்" ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடியும்.

பி.ஸி.ஆர். பரிசோதனை :

                 * 'எய்ட்ஸ்" வைரஸின் பாதிப்பை அறிந்து கொள்ள மிகவும் நுட்பமான பரிசோதனையாகும் இது. இந்த 'பி.ஸி.ஆர்." பரிசோதனையை, 'பாலி மரேஸ் செயின்ரியாஷன்" என்று கூறுவார்கள். இப்பரிசோதனை மூலம், 'எய்ட்ஸ்" கிருமி உடலில் இருப்பதை உறுதி செய்வதுடன், எந்த அளவிற்கு இந்த வைரஸ் இரத்தத்தில் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க முடியும். மேலும், இந்த வைரஸ் உடலில் உட்புகுந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே இப்பரிசோதனையின் மூலமாக இதைக் கண்டுபிடிக்க முடியும்.

                * இரத்தத்தில் 'லிம்போசைட்ஸ்" எனப்படும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை, குறிப்பாக சிடி4 என்ற வெள்ளையணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடும். உடலின் எதிர்ப்புத்திறன் குறைந்து விடும். இதன் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் உண்டாகும். சிடி4 செல்களின் எண்ணிக்கையைக் கொண்டு எய்ட்ஸ் நோயின் தன்மையையும் அறியலாம்.

24 ஆன்டிஜின் பரிசோதனை :

                      * எய்ட்ஸ் நோயை உறுதி செய்ய 24 என்ற ஆன்டிஜின் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த ஆன்டிஜின், எய்ட்ஸ் வைரஸின் உடலிலுள்ள முக்கிய ஆன்டிஜினாகும்.

கருத்துகள் இல்லை