* கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பு மண்ணீரல். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல். இது, ரெட்டிக்குலார் செல்கள் மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளால் ஆன வலைப்பின்னல் அமைப்புக் கொண்டது. முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களை அழிப்பதே மண்ணீரலின் முக்கியப் பணியாகும். மேலும், ரத்த சிவப்பணுக்களின் செயல்களைச் சீர்ப்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் இதன் வேலையாகும்.

            * மண்ணீரல் பாதிக்கப்பட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மண்ணீரல் தூண்டுகிறது. அதேபோல் ரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப்பொருட்களை வடிகட்டி வெளியேற்றவும் செய்கிறது.

மண்ணீரல் நோய் வரக் காரணங்கள் :

                   * கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவைகளால் மண்ணீரல் பாதிக்கப்படலாம்.

                   * மன அழுத்தம், கோபம், எரிச்சல் அடிக்கடி ஏற்படுவோர்க்கு மண்ணீரல் பாதிப்படையும்.

                   * இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு காரணமாக மண்ணீரலில் பாதிப்பு உண்டாகும்.

                   * மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

                   * கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்படையும்.

                   * கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவற்றாலும், மண்ணீரல் பாதிக்கப்படலாம்.

                     { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

மண்ணீரலைப் பலப்படுத்தும் உணவுகள் :

                           கீரைகள், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயிறு, சின்ன வெங்காயம். கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ரா பெர்ரி, பிளம்ஸ் இவற்றில் உள்ள மெத்தியோனின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், மண்ணீரல், பித்தநீர் சுரப்பிகளின் இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.

பொதுவான மருத்துவக் குறிப்புகள் :

                             கல்லீரல், மண்ணீரல் வீக்கம் கொண்டவர்கள் திப்பிலியை வறுத்து பொடி செய்து, கரிசலாங்கண்ணி கீரை பொடியுடன் கலக்க வேண்டும். அதனுடன் நாட்டு சர்க்கரை கலந்து இதனை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்விக்கலையும் இது குணப்படுத்தும்.

மண்ணீரலின் முக்கியத்துவம்

              * கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பு மண்ணீரல். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல். இது, ரெட்டிக்குலார் செல்கள் மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளால் ஆன வலைப்பின்னல் அமைப்புக் கொண்டது. முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களை அழிப்பதே மண்ணீரலின் முக்கியப் பணியாகும். மேலும், ரத்த சிவப்பணுக்களின் செயல்களைச் சீர்ப்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் இதன் வேலையாகும்.

            * மண்ணீரல் பாதிக்கப்பட்டால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை அழித்து, சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மண்ணீரல் தூண்டுகிறது. அதேபோல் ரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப்பொருட்களை வடிகட்டி வெளியேற்றவும் செய்கிறது.

மண்ணீரல் நோய் வரக் காரணங்கள் :

                   * கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவைகளால் மண்ணீரல் பாதிக்கப்படலாம்.

                   * மன அழுத்தம், கோபம், எரிச்சல் அடிக்கடி ஏற்படுவோர்க்கு மண்ணீரல் பாதிப்படையும்.

                   * இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு காரணமாக மண்ணீரலில் பாதிப்பு உண்டாகும்.

                   * மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

                   * கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்படையும்.

                   * கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவற்றாலும், மண்ணீரல் பாதிக்கப்படலாம்.

                     { இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }

மண்ணீரலைப் பலப்படுத்தும் உணவுகள் :

                           கீரைகள், கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயிறு, சின்ன வெங்காயம். கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ரா பெர்ரி, பிளம்ஸ் இவற்றில் உள்ள மெத்தியோனின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், மண்ணீரல், பித்தநீர் சுரப்பிகளின் இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.

பொதுவான மருத்துவக் குறிப்புகள் :

                             கல்லீரல், மண்ணீரல் வீக்கம் கொண்டவர்கள் திப்பிலியை வறுத்து பொடி செய்து, கரிசலாங்கண்ணி கீரை பொடியுடன் கலக்க வேண்டும். அதனுடன் நாட்டு சர்க்கரை கலந்து இதனை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்விக்கலையும் இது குணப்படுத்தும்.

கருத்துகள் இல்லை